மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாசலில் சேதங்களை ஆய்வு செய்கிறார் பிரியங்கா காந்தி!

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா செவ்வாய்க்கிழமை 2 நாள் பயணமாக ஹிமாசலம் செல்கிறார். 

News image
கோப்புப் படம்
Updated On :11 செப்டம்பர் 2023, 9:52 am

DIN

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா செவ்வாய்க்கிழமை 2 நாள் பயணமாக ஹிமாசலம் செல்கிறார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 

சமீபத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மணாலி, குலு, மண்டி, சிம்லா மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களுக்கு பிரியங்கா காந்தி வருகை தர உள்ளார். 

மேலும், மலைப்பிரதேசங்களில் பல்வேறு நிவாரண பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். 

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஹிமாசலில் பெய்த கனமழை, வெள்ளத்துக்கு 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். 

ஹிமாசலத்தை மீண்டும் மீட்டெடுக்க மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். 

செப்.9ல் தில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் முர்மு வழங்கிய விருந்தில் முதல்வர் சுகு கலந்துகொண்டார். மேலும் பிரதமர் மோடியை சந்தித்து மாநில நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். 

சேதத்தின் தீவிரத்தைத் தெரிவித்த முதல்வர், இதைத் தேசிய பேரிடராக அறிவிக்குமாறு மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். பேரழிவின் விளைவாக, மாநிலத்தில் ரூ.12,000 கோடிக்கு  மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தனது தரப்பில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.