யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹைதராபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2023, 11:03 am

DIN

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வு செய்யப்பட்ட பிறகு புதிய செயற்குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.

இதையடுத்து புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நடப்பாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 

Story image

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் செயற்குழுவின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

செயற்குழுவின் விரிவான கூட்டம் நாளை(செப். 17) நடைபெறுகிறது. இதில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். இதற்கு 159 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் 149 பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

மேலும் நாளை தெலங்கானாவில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொதுக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.