மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நாக்பூர்!

நாக்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ள அம்பாஜாரி ஏரிப் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :23 செப்டம்பர் 2023, 8:02 am

நாக்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்ரத்தின் உள்ள நாக்பூரின் சில பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அம்பாஜாரி ஏரி பகுதியில் சிக்கிய 6 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுவினர் சனிக்கிழமை வெளியேற்றினர்.

Story image

இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ஒரு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

Story image

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "காலையில் தண்ணீர் தோள்பட்டை வரை இருந்தது. எங்களுக்கு தகவல் தெரிந்தவுடன், நாங்கள் ஒரு படகைக் கொண்டு வந்து, மக்களை மீட்டோம். அவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கியுள்ளோம்." எனத் தெரிவித்தார்.

நாக்பூரில் நீரில் கார்கள் மூழ்கியும், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.