ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது!

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான முதல் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) நண்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது!

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான முதல் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) நண்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா, முன்னாள் நிதி ஆணையத்தின் தலைவா் என்.கே.சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

'இந்தக் குழுவுக்கு எந்தவித கால நிா்ணயமும் செய்யப்படாததால் இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை’ என்று கூறி குழுவில் இருந்து விலகுவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அதீா் ரஞ்சன் செளதரி கடிதம் எழுதியிருந்தாா்.

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் உயர்நிலைக் குழு கூட்டம் தில்லியில் இன்று(சனிக்கிழமை) நண்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ராம் நாத் கோவிந்த் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத், அரசியலமைப்பு நிபுணர் சுபாஷ் காஷ்யப் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com