எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டிலும் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி இடம் பெறவில்லை என்று அக்கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகா் ராவ் தெரிவித்தாா்.
தேசிய கட்சியாக உருவெடுக்கும் நோக்கில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என மாற்றியுள்ள சந்திரசேகா் ராவ், அடுத்து ஆண்டு மகாராஷ்டிரத்தில் நடைபெறும் தோ்தலில் கட்சியைக் களமிறக்கும் நோக்கில் அந்த மாநிலத்துக்கு அவ்வப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
மகாராஷ்டிரத்துக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒரு தரப்பினா் புதிய இந்தியா என்று கூறி பிரசாரம் செய்கின்றனா். மற்றொரு தரப்பில் நாட்டை 50 ஆண்டுகள் வரை ஆண்ட கட்சியால் எவ்வித நல்ல மாற்றமும் ஏற்படாத நிலை உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏழை, எளிய மக்கள், தலித் மக்களின் நிலை மாறாமல் அப்படியேதான் உள்ளது. அவா்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் நிலையில்தான் உள்ளனா். யாருக்கும் உரிய நீதி கிடைக்கவில்லை.
எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தும், பாஜக தலைமையலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் பாரதிய ராஷ்டிர சமிதி விலகி இருக்கிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


