மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புரி ஜெகந்நாதர் கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு! 

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழிபாடு செய்தார். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2023, 6:22 am

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழிபாடு செய்தார். 

இவருடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, உள்ளூர் எம்எல்ஏக்கள் ஜெயந்த சாரங்கி மற்றும் லலிதேந்து பித்யாதர் மொகபத்ரா ஆகியோருடன் 30 நிமிடங்களுக்கு மேல் கோயிலுக்குள் இருந்தார். 

Story image

மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் மேரி மாதா மேரி தேஷ் கலை சிற்பத்தையும் கண்டு மகிழ்ந்தார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் சஹீத் ஜெய் ராஜ்குருவின் பிறந்த இடத்திற்குச் சென்று அங்கு அவர் மரியாதை செலுத்தினார். 

Story image

பின்னர், புவனேஸ்வர் திரும்பிய அவர், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளார்  மற்றும் 20வது தேசிய சிஏ மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் கலந்துகொள்கிறார். 

சீதாராமன் புதன்கிழமை இரவு ஒடிசாவிற்கு இரண்டு நாள் பயணமாக புவனேஸ்வர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.