பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறும்: அனுராக் தாக்குர்

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
அனுராக் தாக்குர் | INS
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், ராஜஸ்தானில் பாஜக அறுதி பெரும்பான்மையில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டிச.3 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மேலும் அவர், “ஊழல் ஆட்சியில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்கிற மக்களின் காத்திருப்பு நாளையோடு முடிந்தது. காங்கிரஸின் உண்மையான முகம் நாளை வெளிப்படும். மக்களுக்கான நல்லாட்சி, பாஜக ஆட்சியாக அமையும். மக்களுக்கு வேண்டிய வளர்ச்சியும் இரண்டு மடங்கு ஆற்றல் கொண்ட ஆட்சியை ராஜஸ்தானில் பாஜக கொண்டுவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இறந்ததால் அந்தத் தொகுதியில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.