கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சோரம்தங்கா!

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சோரம்தங்கா.

News image
Updated On :5 டிசம்பர் 2023, 5:17 pm IST

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று மிசோ தேசிய முன்னணி கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சோரம்தங்கா.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

அதில் சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. சோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 

அதையடுத்து மிசோரம் முதல்வர் பதவியில் இருந்து சோரம்தங்கா ராஜிநாமா செய்தார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் ராஜிநாமா செய்வதாக கூறியுள்ளார். 

கட்சியின் மூத்த துணைத் தலைவரான டான்லுயாவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில், “சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எம்.என்.எஃப் தவறிவிட்டது. கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நான் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்கிறேன். எனது ராஜிநாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.