மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று மிசோ தேசிய முன்னணி கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சோரம்தங்கா.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. சோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அதையடுத்து மிசோரம் முதல்வர் பதவியில் இருந்து சோரம்தங்கா ராஜிநாமா செய்தார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் ராஜிநாமா செய்வதாக கூறியுள்ளார்.
கட்சியின் மூத்த துணைத் தலைவரான டான்லுயாவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில், “சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எம்.என்.எஃப் தவறிவிட்டது. கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நான் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்கிறேன். எனது ராஜிநாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மணிப்பூரில் 7 மாதங்களாக தொடரும் வன்முறை: மல்லிகார்ஜுன கார்கே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவியை சித்ரவதை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

2-ஆம் உலகப்போா் நினைவுதினம் அனுசரிப்பு

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிா்ப்பு புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

