டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருப்பதியில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தோடு வழிபாடு!

ஆந்திரத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தோடு இன்று வழிபாடு மேற்கொண்டார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:23 pm

DIN

ஆந்திரத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தோடு இன்று வழிபாடு மேற்கொண்டார். 

2004 முதல் 2009 வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, ரயில்வேயில் பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில், கைது செய்யப்பட்ட லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி, மகன் உள்பட குடும்பத்தினரோடு இன்று திருப்பதிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் யாதவ் குடும்பத்தினர் பங்கேற்றனர். 

பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பிரார்த்தனை செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, திருமண நாளான இன்று எனது குடும்பத்தினருடன் ஸ்ரீ திருப்பதி பாலாஜி கோயிலில் வணங்கி, தரிசனம் செய்ததன் மூலம் வேங்கடேச பெருமாளின் ஆற்றலையும், ஆசீர்வாதத்தையும் பெற்றேன்.

மாநில மக்களின் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நலனுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்தோம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.