மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாதுகாப்பு அத்துமீறல்: சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீடிப்பு

பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் கைதானவர்களை விசாரிக்க நீதிமன்றம் காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :22 டிசம்பர் 2023, 9:05 am

DIN

புது தில்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் நீதிமன்ற காவலை ஜன. 5 வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜாவை விசாரிக்கத் தில்லி காவல்துறை அவகாசம் கேட்டு அளித்த கோரிக்கையை ஏற்று காவலை நீடித்துள்ளார்.

லலித் ஜா, இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாகவும் ஒட்டுமொத்த சதி குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் காவலர்கள் கூறினர்.

முன்னதாக, வியாழக்கிழமை நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நால்வரின் காவலை ஜன.5 வரை நீடித்து உத்தரவிட்டது.

2001 பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்த அதே நாளில்  சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் பார்வையாளர் பகுதியில் இருந்து அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணக்குப்பிகளை வீசினர்.

அதே நேரத்தில் அமோல் ஷிண்டே மற்றும் நீலம் இருவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.