ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பிகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜனவரியில் 5-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிச.22-ஆம் தேதி தேஜஸ்வி யாதவையும், டிச.27-ஆம் தேதி லாலு பிரசாத்தையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், தேஜஸ்வி யாதவ் டிச.22-ம் தேதி ஆஜராகாத நிலையில், ஜனவரி 5-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் சிலா் விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.