அருணாச்சல பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 139-வது நாளைக் கொண்டாடும் வகையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அம்மாநில முன்னாள் முதல்வர் தகம் பரியோ, ராஜிவ் காந்தி பவனில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரை ஆற்றியுள்ளார்.
காங்கிரஸின் எப்போதைக்குமான நோக்கம், மக்கள் நலனாகத்தான் இருந்துள்ளது என அவர் பேசியுள்ளார்.
தகம், ”காங்கிரஸ் அதன் புகழ்மிக்க வரலாறு மற்றும் மரபு குறித்து பெருமை கொண்டிருக்கிறது.
“காங்கிரஸ், இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பன்மொழி மற்றும் பன்மத சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுகிறது.
இந்தியாவின் சுதந்திர போராட்டத்திலும் நாட்டின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் தலைமை தாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைப்பு!
மேலும், காங்கிரஸ்- அரசியல் கட்சி மட்டுமில்லை. அனைத்து இந்தியர்களின் வாழ்வின் அங்கம் என அவர் பேசியுள்ளார்.