புது தில்லி: அயோத்தியில் ஜன.22-ல் நடைபெறவுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி கலந்து கொள்வது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், கார்கே மற்றும் சோனியா காந்திக்கு விழாவுக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருவருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இதையும் படிக்க: ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?
மேலும், விழாவில் கலந்து கொள்வது பொருத்தமான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு சரியான நேரத்தில் அறிவுறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.