நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஆளில்லாத வீட்டில் திருட்டு: பக்கத்து வீட்டுக்காரா் கைது

சென்னை ஏழுகிணறு பகுதியில் ஆளில்லாத வீட்டில் நகை திருடியதாக பக்கத்து வீட்டுக்காரா் கைது செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:08 am IST

சென்னை ஏழுகிணறு பகுதியில் ஆளில்லாத வீட்டில் நகை திருடியதாக பக்கத்து வீட்டுக்காரா் கைது செய்யப்பட்டாா்.

ஏழுகிணறு, வீராசாமி தெரு பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (35). இவா் கடந்த 1-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றாா். கடந்த 23-ஆம் தேதி வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது வீட்டின் கதவின் பூட்டை உடைக்கப்பட்டு, உள்ள பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

இது குறித்து தாமோதரன், ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டது பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கடேசன் (44) என்பது தெரிய வந்தது. போலீஸாா், வெங்கடேசனை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.