சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பட்ஜெட் 2023: இதுதான் நடுத்தர மக்களுக்கான சலுகையா? 

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி இந்த அண்டு 66 சதவீதம் அதிகமாக ஒதுக்கி மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2023, 4:13 pm IST


புது தில்லி: பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி இந்த அண்டு 66 சதவீதம் அதிகமாக ஒதுக்கி மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, பொது பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு பல சலுகைகளைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதற்குக் காரணம், தானும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், நடுத்தரக் குடும்பத்தினர் சந்திக்கும் சிக்கல்களை நன்கு அறிவேன் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் குறித்த அறிவிப்பின்போது குறிப்பிட்டிருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டியும், வரும் நாள்களில் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாலும், நடுத்தர மக்களுக்காக பல நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில்தான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு 2023 - 24ஆம் நிதியாண்டில் ரூ.79,000 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2022 - 23ஆம் நிதியாண்டில் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இத்திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் தகுதிவாய்ந்த 80 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் என்று பார்த்தால்..

கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.9000 கோடி தொகுப்பு நிதி.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம்.
புதிய பழகுநர் திட்டத்தின்கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு   உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.