தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா வருகை!

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா வருகை!
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து 7 ஆண், 5 பெண் என 12 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட உள்ளன. 

இவை இந்திய விமானப்படையின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவின் கௌடங்  விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்திற்கு வந்து, பின்னர் ஹெலிகாப்டர்கள் மூலமாக குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்காக குனோ தேசிய பூங்காவில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com