ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கூலிப்படையை ஏவி தந்தையைக் கொன்ற மகன்: பெங்களூருவில் பரபரப்பு!

பெங்களூருவின் மாரத்தஹள்ளியில் ரூ.1 கோடிக்கு கூலிப்படை ஏவி தன் தந்தையைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 11:04 am

IANS

பெங்களூருவின் மாரத்தஹள்ளியில் ரூ.1 கோடிக்கு கூலிப்படை ஏவி தன் தந்தையைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு பனத்தூர் வீரப்பாலே பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மனைவி, மகன் மணிகண்டா(30) ஆகியோருடன் வசித்துவந்தார் நாராயணசாமி(71). 

கடந்த பிப்.13-ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில், மர்ம நபர்களால்  வெட்டிக் கொல்லப்பட்டார். 

இந்நிலையில் மகன் மணிகண்டா மற்றும் அவரது நண்பர்கள் ஆதர்ஷா, சிவக்குமார் ஆகியோரை சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு போலீஸார் அவர்களை கைது செய்தனர். 

மகன் மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், 

மணிகண்டனுக்கு திருமணமான நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக தனது முதல் மனைவியை கொன்றுள்ளார். அவருக்கு மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். அவருடனும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். 

இந்நிலையில், பெங்களூரில் 28 அடுக்குமாடி குடியிருப்புகள், பல ஏக்கர் நிலத்துக்கும் சொந்தக்காரரான நாராயணசாமி, அதில் ஒன்றையும், சில ஏக்கர் நிலத்தையும் மகனின் இரண்டாவது மனைவிக்கு எழுத முடிவு செய்தார். 

இதனால் மனமுடைந்த மணிகண்டன், தந்தையை கொல்ல முடிவு செய்தார். கூலிப்படை நியமித்து அவர்களுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாகப் பேரம் பேசியதையடுத்து, 
முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுத்ததாக தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து, வழக்குப் பதிந்து மாரத்தஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.