சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சோனியா காந்தி
சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடனிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று முதலே சுவாசத் தொற்றினால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வரும் நிலையில், சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு பிரியங்கா காந்தி மீண்டும் நடைப்பயணத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com