வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி!

தலைநகர் தில்லியில் கடந்தாண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் இறந்துள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

News image
தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி!
Updated On :5 ஜனவரி 2023, 10:08 am

ANI

தலைநகர் தில்லியில் கடந்தாண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் இறந்துள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, 

2022-ஆம் ஆண்டில் 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் 108 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022-ஆம் ஆண்டில் மலேரியாவால் ஒருவர் உயிரிழந்தார். 

2017, 2018, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தில்லியில் மலேரியாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 2020இல் ஒருவர் பலியாகியுள்ளார். 

அதேசமயம், டிசம்பர் கடைசி வாரத்தில், டிசம்பர் 31 வரை 1 சிக்குன்குனியா வழக்குப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 48 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன. சிக்குன்குனியாவால் யாரும் இறக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.