தலைநகர் தில்லியில் கடந்தாண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் இறந்துள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி,
2022-ஆம் ஆண்டில் 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் 108 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022-ஆம் ஆண்டில் மலேரியாவால் ஒருவர் உயிரிழந்தார்.
2017, 2018, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தில்லியில் மலேரியாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 2020இல் ஒருவர் பலியாகியுள்ளார்.
அதேசமயம், டிசம்பர் கடைசி வாரத்தில், டிசம்பர் 31 வரை 1 சிக்குன்குனியா வழக்குப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 48 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன. சிக்குன்குனியாவால் யாரும் இறக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.