ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்... மோடி குறித்த பிபிசி விடியோ!

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

News image
Updated On :19 ஜனவரி 2023, 9:24 pm IST

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

2002 குஜராத் கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையும், அப்போது அம்மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முஸ்லிம்கள் நிலை குறித்தும் ''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி -1) என்ற தலைப்பில் பிபிசி நிறுவனம் ஆவணப்படத்தை கடந்த செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பியது. 

அதனைத் தொடர்ந்து யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த ஆவணப்படம், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் எழுந்தன. 

இந்நிலையில், இந்த விடியோ குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடித் தொடர்புள்ளதாக பிபிசி ஆவணப்படத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தானைச் சேர்ந்த பிரிட்டிஷ் எம்.பி. இம்ரான் ஹுசைன் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் ரிஷி சுனக், பிரிட்டனின் நிலைப்பாடு மாறவில்லை. தெளிவானது. பிற உயிர்களை துன்புறுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மரியாதைக்குரிய மனிதர் மீது வைக்கும் கருத்துகளுக்கு உடன்படவில்லை எனக் குறிப்பிட்டு அமர்ந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.