நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளது: சஞ்சய் ரௌத்

ராகுல் காந்திக்கு இந்தியாவின் பிரதமராகும் திறன் உள்ளது என சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஜனவரி 2023, 7:25 pm IST

ராகுல் காந்திக்கு இந்தியாவின் பிரதமராகும் திறன் உள்ளது என சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடரும் இந்த ஒற்றுமை நடைப்பயணம் வெறுப்புணர்வை நீக்க மேற்கொண்டு வரும் பயணம் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத் கூறியதாவது: ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த ஒற்றுமை நடைப்பயணம் வெறுப்புணர்வுக்கு எதிரானதாகும். அவர் இந்தியாவை ஒன்றினைக்க கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்த நடைப்பயணத்தை முன்னெடுத்துள்ளார். கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் தவிர்த்து ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தலைமைப் பண்புகளை நிரூபிப்பார்.

2024 தேர்தலில் அவர் அதிசயங்களை நிகழ்த்துவார். பாஜக அவரது இந்த ஒற்றுமை நடைப்பயணம் குறித்து தவறாக தகவல்களை பரப்பி வருகிறது. அனைவராலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்க முடியாது. 3500 கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்கு மன உறுதியும், மக்கள் மீது அளவுகடந்த அன்பும் வேண்டும். ராகுல் காந்தி, தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடத் தயாராக இல்லை எனக் கூறுகிறார். ஆனால், மக்கள் அவரை பிரதமராகப் பார்க்க விரும்பினால் அவருக்கு வேறு வழியே கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.