முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

வேகமாக தயாராகி வரும் சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை

அதிவிரைவுச் சாலையின் 15 சதவீதம் அதாவது தமிழகத்தின் பகுதியில் அமைந்த 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

தயாராகி வரும் சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை

Updated On :27 ஜனவரி 2023, 4:25 pm IST

சென்னை: சென்னை- பெங்களூரு இடையேயான 96 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அதிவிரைவுச் சாலையின் 15 சதவீதம் அதாவது தமிழகத்தின் பகுதியில் அமைந்த 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வரும் 15 - 16 மாதங்களில், ஒட்டுமொத்தமாக சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை தயாராகிவிடும் என்கிறார்கள்.

மழையின் போது இப்பணிகளைத் தொடர்வது சவாலாக இருந்தது. குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால், இப்பணிகளில் தொய்வு கடினமாக இருந்தது, ஆனால் இப்போது தண்ணீர் குறையத் தொடங்கியதால், நீர்நிலைகளால் சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது”என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்த திட்டத்துக்காக 833 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 95 சதவீத இடங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்படிருந்தது.  மீதம் விரைவில் கையகப்படுத்துப்படும். தமிழகத்தில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 24 கிலோ மீட்டர் தொலைவுள்ள குடிபாலா - வாலாஜாபேட்டை, 24 கிலோ மீட்டர் தொலைவுள்ள வாலாஜாபேட்டை - அரக்கோணம், 25 கிலோ மீட்டர் தொலைவுள்ள அரக்கோணம் - காஞ்சிபுரம், 32 கிலோ மீட்டர் தொலைவுள்ள காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் என பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை ஆந்திர மாநிலத்துக்குள் வருகிறது. இந்த சாலையில் தமிழகத்தில் மட்டும் 54 மேம்பாலங்கள், 13 வாகன சுரங்கப் பாதைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்தச் சாலை, கர்நாடகம், ஆந்திரம் தமிழ்நாடு ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் வகையில் உருவாகி வருகிறது. ரூ.16,730 கோடியில் உருவாகி வரும் இந்தச் சாலை தயாராகிவிட்டால், பெங்களூரு - சென்னை இடையேயான பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் குறைந்துவிடும். தற்போதுள்ள 326 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இந்தப் பாதையை நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பது புள்ளிவிவரம்.

தமிழகத்தில் மட்டும் ஏழு மாவட்டங்களை இந்த நெடுஞ்சாலை கடந்து செல்லும். இதனால், சென்னை - பெங்களூரு தொழில்வளம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.