புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதானி குழுமத்தில் மேலும் ரூ.300 கோடிபங்குகளை வாங்குகிறது எல்ஐசி

அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அந்த குழுமத்தில் மேலும் ரூ.300 கோடி பங்குகளை எல்ஐசி வாங்க முடிவு செய்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2023, 2:24 am

DIN

பங்குச் சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபடுவதாக வெளியான ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையைத் தொடா்ந்து அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அந்த குழுமத்தில் மேலும் ரூ.300 கோடி பங்குகளை எல்ஐசி வாங்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பாக அதிகரித்துக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்ப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அதானி குழுமப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. அக்குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ. 4.17 லட்சம் கோடி வரை வீழ்ச்சியடைந்தது.

நாட்டின் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களிலும் ஏற்கெனவே ரூ.28,400 முதலீடு செய்திருந்தது. அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கைக்குப் பிறகு எல்ஐசி நிறுவனமும் கடும் இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல் பரவியது.

ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் எல்ஐசியிடம் இருந்த அதானி குழுமப் பங்குகள் மதிப்பு ரூ.72,200 கோடியாக இருந்தது. ஆய்வறிக்கை வெளியாகி பங்குகள் சரிவைச் சந்தித்த நிலையில் மதிப்பு ரூ.55,700 கோடியாக குறைந்துள்ளது. எனினும், அதானி குழும பங்குகளில் முதலீடு செய்ததை தொகையைவிட இப்போதைய மதிப்பு ரூ.27,300 கோடி கூடுதலாகவே உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏனெனில், அதானி பங்குகள் மிகவும் குறைவான விலையில் இருந்தபோதே அதில் எல்ஐசி முதலீடு செய்துள்ளது.

இதனிடையே, அதானி குழுமம் அண்மையில் அறிவித்த ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்கு வெளியீட்டில் மேலும் ரூ.300 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கவும் எல்ஐசி முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.