அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழு இன்று புறப்பட்டது!

அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழு இன்று தெற்கு காஷ்மீரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழு இன்று தெற்கு காஷ்மீரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. 

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையின் மூன்று நாளில் இதுவரை 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். இந்நிலையில் 4,758 பேர் அடங்கிய நான்காவது குழு இன்று புறப்பட்டுள்ளது.

எட்டு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வானத்துடன் அதிகாலை 3.40 மணி முதல் 4.10 மணி வரை ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நான்காவது அமர்நாத் பயணிகளின் குழு புறப்பட்டுச் சென்றது. அதில், 3,030 பயணிகள் பஹல்காம் வழியாகவும், 1,728 பயணிகள் பால்டால் வழியாகவும் சென்றுள்ளனர். 

முன்னதாக, கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜென்ரல் முகேஷ் சிங் ஞாயிற்றுக்கிழமை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்பன் மாவட்டத்திற்குச் சென்று பனிஹாலில் உள்ள முகாமில் பாதுகாப்பை ஆய்வு செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com