மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 
மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில், 23 நாள்களில் மொத்தம் 17 அமா்வுகள் நடைபெறவுள்ளன. சட்டம் இயற்றுதல் மற்றும் இதர விவகாரங்களில், ஆக்கபூா்வமான விவாதங்கள் நடைபெற அனைத்துக் கட்சிகளும் பங்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொது சிவில் சட்டம், தில்லி நிா்வாகப் பணிகள் தொடா்பான மத்திய அரசின் அவசரச் சட்டம், மணிப்பூர் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதங்களை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கடந்த மே 28 ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு அனைத்துக் கட்சிகளையும் இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com