
சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில், பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும் விரைவு ரயில் (எண்: 17237) மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் (எண்: 17238) ஆகியவை திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதை மாற்றம்: ஜாா்கண்ட் மாநிலம் ஹாட்டியாவிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக ஜூலை 11, 15 ஆகிய தேதிகளில் பெங்களூரு செல்லும் விரைவு ரயில்கள் (எண்கள்: 12835, 18637) ஆந்திர மாநிலம் நிடடவோலே, பீமாவரம் நகரம், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும்.
அதேபோல், ஜாா்க்கண்ட் மாநிலம் டாடாநகரிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12889) நிடடவோலு, பீமாவரம் நகரம், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




