போபாலில் இருந்து தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலாக போபால் - தில்லி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இந்த ரயில் இன்று காலை 5.40 மணிக்கு போபால் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தில்லி நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதையும் படிக்க | அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
காலை 7.30 மணியளவில் குர்வாய் கெதோரா நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் சென்றபோது 14-வது பெட்டியின் அடிப்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. பதற்றம் அடைந்த உடனடியாக பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கினர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் பற்றிய தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே துறை கூறுகையில், பெட்டியின் அடியில் இருந்த பேட்டரியில் இருந்து தீ ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ரயில்வே அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆலங்குளத்தில் கால்நடை விவசாயிகளுக்குப் பயிற்சி

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் - புகைப்படங்கள்

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை?
தினப்பலன்கள் - சிம்மம்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

