இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மும்பையில் பெய்த கன முதல் மிகக் கனமழை காரணமாக, நகரமே தத்தளிக்கிறது.
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் சராசரி அளவு 88.24 மில்லி மீட்டர் என்று பதிவாகியிருக்கிறது.
ஏற்கனவே, மும்பை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமோ, செவ்வாய்க்கிழமை, மும்பையில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?
மும்பையின் பாந்த்ரா, செம்பர், கோட்டை, மாதுங்கா, பைகுள்ளா பகுதிகளில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில்தான், ஜூலை 19ஆம் தேதி வரை மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.