6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்றும் முடங்கியது.

News image
Updated On :27 ஜூலை 2023, 5:55 am

DIN

தில்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்றும் முடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாள்களாக மணிப்பூர் கலவரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் நேற்று கொண்டுவந்தது. இதனை அவைத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு இன்று கருப்பு உடை அணிந்து வந்த இந்தியா கூட்டணியின் எம்பிக்கள், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்களவையில் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவைத் தலைவர் ஓம் பிர்லாவின் இருக்கை முன் பதாகைகளுடன் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.