சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதாகவும், ஆண்களுக்கு ஒரு மாத காலம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விரையில் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.
பேறுகால நலச்சட்டம் 1961ன் படி பெண்களுக்கு 6 மாத விடுப்பு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.