பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து சில நாள்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கூட்டம் பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும், கட்சி சார்பில் யார் பங்கேற்பார் என்று விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், திரிணமூல், திமுக, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடகரை வாய்க்காலுக்கு தண்ணீா் கோரி விவசாயிகள் மனு: வாய்க்கால் தலைப்பை மாயனூா் தடுப்பணைக்கு மாற்றவும் வலியுறுத்தல்
கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

கடும் வெப்பத்திலிருந்து பறவைகளை பாதுகாத்திட தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

ஸ்ரீவீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


