மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது.

News image

விபத்துக்குள்ளான சரக்கு ரயில்கள்

Updated On :25 ஜூன் 2023, 4:24 am

DIN


மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது. அதிகாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்ற இந்த ரயில் விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. 

ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், 12 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டன. 

ஒடிசாவில் சமீபத்தில் 2 பயணிகள் ரயில் - சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 290 பேர் உயிரிழந்தனர். தற்போது மேற்கு வங்கத்தில் மீண்டும் இரண்டு ரயில்கள் மோதி விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.