அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது.

News image

விபத்துக்குள்ளான சரக்கு ரயில்கள்

Updated On :25 ஜூன் 2023, 9:54 am IST


மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது. அதிகாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்ற இந்த ரயில் விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. 

ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், 12 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டன. 

ஒடிசாவில் சமீபத்தில் 2 பயணிகள் ரயில் - சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 290 பேர் உயிரிழந்தனர். தற்போது மேற்கு வங்கத்தில் மீண்டும் இரண்டு ரயில்கள் மோதி விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.