நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது.

News image

விபத்துக்குள்ளான சரக்கு ரயில்கள்

Updated On :25 ஜூன் 2023, 9:54 am IST


மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது. அதிகாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்ற இந்த ரயில் விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. 

ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், 12 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டன. 

ஒடிசாவில் சமீபத்தில் 2 பயணிகள் ரயில் - சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 290 பேர் உயிரிழந்தனர். தற்போது மேற்கு வங்கத்தில் மீண்டும் இரண்டு ரயில்கள் மோதி விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.