மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
ராகுல் காந்தி (கோப்புப் படம்)

தில்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.

100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரஸின் விமா்சனமாகும்.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக தில்லியில் இருந்து இன்று காலை மணிப்பூருக்கு புறப்பட்டு ராகுல் காந்தி சென்றார்.

அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோரை சந்திக்கும் ராகுல், இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com