அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

கடந்தாண்டில் மழை, வெள்ளத்துக்கு 1,997 பேர் பலி!

மழை, வெள்ளம், புயல் போன்ற வானிலை பேரிடரால் கடந்த ஓராண்டில் 1,997 பேர் பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2023, 8:01 am

மழை, வெள்ளம், புயல் போன்ற வானிலை பேரிடரால் கடந்த ஓராண்டில் 1,997 பேர் பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு வானிலை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.

அதில், 2022-2023 காலகட்டத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற வானிலை பேரிடரில் சிக்கி நாடு முழுவதும் 1,997 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 30,615 கால்நடைகளும் உயிரிழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 18.54 லட்சம் ஹெக்டார் நிலப்பரப்பிலான பயிர்களும் மழை, வெள்ளம் போன்றவற்றால் சேதமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.