
நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 1,839 ஆகக் குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து வருகின்றது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,839 ஆக பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பு 4.49 கோடியாக உள்ளது.
கரோனாவுக்கு மேலும் 12 பேர் இறந்துள்ளனர். மேலும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27,212ஆகக் குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.