உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கர்நாடக தேர்தலில் வெற்றி வாகை சூடிய 92 வயது வேட்பாளர்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 92 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவகங்கரப்பா  வெற்றி வாகை சூடியுள்ளார். 

Published On :


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 92 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவகங்கரப்பா  வெற்றி வாகை சூடியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. 
காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மூத்த தலைவர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கனகபுரா தொகுதியிலும், முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி அதானா தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் காந்தி நகர் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேவாங்கரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 92 வயதான மூத்த தலைவர் சாமனூர் சிவகங்கரப்பா போட்டியிட்டார். 

அவர் இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர்களில் இவர் அதிக வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த சிவசங்கரப்பா, எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், கடவுள் அருளும் உள்ளது. வேறென்ன வேண்டும் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.