தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பேசி வருகிறார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது.
முதல்வர் பதவி யாருக்கு வழங்குவது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
நேற்று முன்தினம்(திங்கள்) சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தில்லியில் சந்தித்துப் பேசிய நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) டி.கே.சிவகுமார் தில்லி சென்றார்.
இந்நிலையில் ஆலோசனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சித்தராமையாவுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தற்போது டி.கே.சிவகுமாருடன் பேசி வருகிறார்.
எனவே, கர்நாடக முதல்வர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!