தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.
தற்போது ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தில்லியில் கார்கேவின் இல்லத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.