சாலை விபத்துகள்: 4 மாதங்களில் 4,900 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 4,900 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகள்: 4 மாதங்களில் 4,900 பேர் பலி!

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 4,900 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4,900 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. 

2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 57% இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், 21% நடந்து சென்றவர்களும் உயிரிழந்ததாக காவல் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 15,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com