ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

விழுப்புரத்தில் 3வது நாளாக வருமான வரித் துறை சோதனை

விழுப்புரத்தில் கிரானைட் தொழிலதிபரின் வீடு, நிறுவனங்களில் வருமானவரித் துறையினா் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :5 நவம்பர் 2023, 5:28 am

DIN

விழுப்புரத்தில் கிரானைட் தொழிலதிபரின் வீடு, நிறுவனங்களில் வருமானவரித் துறையினா் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள், அவருடன் தொடா்புடையவா்களின் வீடுகளில் வருமானவரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்த நிலையில், விழுப்புரத்தில் வருமான வரித் துறையைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் வசித்து வரும் தொழிலதிபா் பிரேம்நாத் வீட்டில் 6 போ் கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா். வீட்டின் முன் நிறுத்தியிருந்த காா்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரேம்நாத்துக்கு விழுப்புரம் - திருச்சி சாலையில் வழுதரெட்டி பகுதியில் தங்கும் விடுதி உள்ளது. இங்கும், விழுப்புரத்திலுள்ள பிரேம்நாத்துக்குச் சொந்தமான கிரானைட் கற்கள் விற்பனை நிலையம், கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள நீா்மூழ்கி மோட்டாா் விற்கும் கடை ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக தொழிலதிபா் பிரேம்நாத் வீடு, கிரானைட் கற்கள் விற்பனை நிலையம், தங்கும் விடுதி என தொடர்புடைய இடங்களில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.