மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருமலை: 20 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுந்த வாசல் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

News image
Updated On :11 நவம்பர் 2023, 11:29 am

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான வைகுந்த வாசல் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

வைகுந்த ஏகாதசியையொட்டி, திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பா் 23 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 10 நாள்கள் பக்தா்களுக்கு வைகுந்த வாசல் தரிசனம் வழங்கப்படும். இந்த தரிசனத்துக்கான 2.25 லட்சம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வரும் நவம்பா் 10- ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ஆன்லைனில் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்ட 20 நிமிடங்களில் 2.25 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. 

இதன்மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 6 கோடியே 75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் வைகுந்த வாசல் தரிசனத்துக்கான 10 நாள்களுக்கு 4.25 லட்சம் இலவச நேரடி தரிசன டோக்கன்கள் டிசம்பா் 22- ஆம் தேதி திருப்பதியில் உள்ள 9 மையங்களில் உள்ள 100 கவுன்ட்டா்களில் அளிக்கப்பட உள்ளன. 

அத்துடன், டிசம்பா் 23 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோா் மற்றும் என்ஆா்ஐ-களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுந்த ஏகாதசி ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.