இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருமலை: 20 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுந்த வாசல் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

News image
Updated On :11 நவம்பர் 2023, 11:29 am

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான வைகுந்த வாசல் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

வைகுந்த ஏகாதசியையொட்டி, திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பா் 23 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 10 நாள்கள் பக்தா்களுக்கு வைகுந்த வாசல் தரிசனம் வழங்கப்படும். இந்த தரிசனத்துக்கான 2.25 லட்சம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வரும் நவம்பா் 10- ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ஆன்லைனில் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்ட 20 நிமிடங்களில் 2.25 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. 

இதன்மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 6 கோடியே 75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் வைகுந்த வாசல் தரிசனத்துக்கான 10 நாள்களுக்கு 4.25 லட்சம் இலவச நேரடி தரிசன டோக்கன்கள் டிசம்பா் 22- ஆம் தேதி திருப்பதியில் உள்ள 9 மையங்களில் உள்ள 100 கவுன்ட்டா்களில் அளிக்கப்பட உள்ளன. 

அத்துடன், டிசம்பா் 23 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோா் மற்றும் என்ஆா்ஐ-களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுந்த ஏகாதசி ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.