குடும்பம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் விழாக்கள் நடைபெறுகிறது. ஆனால், கடமையின் மீது இருக்கும் பக்தியின் காரணமாக, எல்லையைப் பாதுகாப்பதற்காக பண்டிகை நாளிலும் தமது குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலையில், 140 கோடி இந்தியர்களை தங்கள் குடும்பமாக கருதும் உணர்வு பாதுகாப்பு படையினருக்கு மட்டுமே. இதற்காக நாடு உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. அதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு 'தீபம்' ஏற்றப்படுகிறது. மேலும் ராமர் இருக்கும் இடமே அயோத்தி என்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி. "வீரர்கள் இருக்கும் இடம் எந்த கோவிலுக்கும் சளைத்ததல்ல. கடந்த 30-35 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறேன். நான் முதல்வராகவோ, பிரதமராகவோ இல்லாத போதும் தீபாவளி நாளில் எல்லைக்கு சென்று வீரர்களுடன் கொண்டாடுவேன்.