உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்


உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 40 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இடிபாடுகளில் துளையிட்டு தொழிலாளா்களை மீட்க, இந்திய விமானப் படையின் ‘சி-130 ஹொ்குலிஸ்’ விமானம் மூலம் கனரக இயந்திரம் விபத்துப் பகுதிக்கு கடந்த புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தொழிலாளா்களை மீட்க 80 செ.மீ. மற்றும் 90 செ.மீ. விட்டம் கொண்ட இரும்பு குழாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்த 60 மீட்டா் தூரம் வரை துளையிடப்பட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான நிறுவன இயக்குநா் அன்ஷுல் மனீஷ் தெரிவித்திருந்தாா். அவ்வாறு வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ளது என மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து விமானப் படையின் சி17 விமானம் மூலமாக துளையிடும் மற்றொரு இயந்திரம் டேராடூன் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணி நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை மீட்புப் பணியின் போது ராட்ச குழாயை சுரங்கத்திற்குள் செலுத்தும்போது பெரிய அளவில் உடையும் சத்தம் எழுந்தது. இதையடுத்து தற்காலிகமாக மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இயந்திரத்தில் எந்த தவறும் இல்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான நிறுவன இயக்குநா் அன்ஷுல் மனீஷ் தெரிவித்துள்ளார். 

தொழிலாளா்களை மீட்க 60 மீட்டா் தூரம் வரை துளையிடப்பட வேண்டிய நிலையில் 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 165 வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com