மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாஜகவினர் 15 தொகுதிகளை தாண்டுவார்களா என்று பார்க்கலாம்: பூபேஷ் பகேல் கிண்டல்!

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வால் 15 தொகுதிகளில் முதலில் வெற்றி பெற முடியுமா என்று பார்க்கலாம் என பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 நவம்பர் 2023, 3:53 pm IST

சத்தீஸ்கர் தேர்தலில் பா.ஜ.க.வால் 15 தொகுதிகளில் முதலில் வெற்றி பெற முடியுமா என்று பார்க்கலாம் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் ரமண் சிங் 55 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் பேசியதாவது, “ரமண் சிங் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராகவும், சத்தீஸ்கர் முதல்வராகவும் உச்சக்கட்ட புகழில் இருந்தபோதே 52  தொகுதிகளைத் தாண்ட முடியவில்லை. 

அப்படியிருக்கும்போது தற்போது எப்படி பாஜகவினரால் 55 தொகுதிகளில் வெற்றிபெற முடியும். அதெல்லாம் அவர்களின் கட்சியினருக்கு ஊக்கமளிப்பதற்காக பேசுவது.

பாஜகவினர் முதலில் 15 தொகுதிகளை தாண்டுவார்களா என்பதை பார்க்கலாம். டிசம்பர் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். அப்போது மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜகவினரால் 15  தொகுதிகளையாவது கைப்பற்ற முடிந்ததா என்பதை அனைத்து மக்களும் அறிந்துகொள்வார்கள்." என்று பூபேஷ் பகேல் தெரிவித்தார்.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 68 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பாஜக 15 தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.