வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

'நேர்மையானவர் என்பதால் ராகுலுக்கு பயமில்லை' - சுப்ரியா சுலே

ராகுல் காந்தி ஒரு போராளி, தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு அவர் நேர்மையாக பதில் அளிப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார். 

News image

ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சுப்ரியா சுலே.

Updated On :24 நவம்பர் 2023, 12:10 pm IST

ராகுல் காந்தி ஒரு போராளி, தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு அவர் நேர்மையாக பதில் அளிப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார். 

பிரதமா் நரேந்திர மோடியை ‘அதிருஷ்டமில்லாதவா்’, ‘கொள்ளையடிப்பவா்’, ‘பெரும் தொழிலதிபா்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்பவா்’ எனத் தோ்தல் பிரசாரத்தின்போது பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்குத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை (நவ.23) நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு சனிக்கிழமை (நவ.25) மாலைக்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக ஆளும் பாஜகவினரும் எதிராக எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, காங்கிரஸ் தலைவர் 'ராகுல் காந்தி ஒரு போராளி, வலிமையான நேர்மையான தலைவர். பிரதமர் மீதான கருத்துகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு அவர் கண்ணியமாகவும் நேர்மையாகவும் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன். அவர் நேர்மையானவர் என்பதால் அவரால் எந்த அச்சமும் இன்றி இருக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், 'ராகுல் காந்தியின் குடும்பத்தைப் பற்றி பாஜக பேசியதற்கு எங்களிடம் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அப்படி இருக்க, இப்போது ராகுல் பேசும்போது, அவர்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் நேருவைப் பற்றிக்கூட மிகவும் அவதூறாகப் பேசியிருக்கிறார்கள்' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.