டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை தொலைவு 4ஆவது முறையாக அதிகரிப்பு 

‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தின் சுற்றுப் பாதை தொலைவு வெற்றிகரமாக நான்காவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:44 pm IST

‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தின் சுற்றுப் பாதை தொலைவு வெற்றிகரமாக நான்காவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ எனும் நவீன விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது.

பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ஆம் தேதி அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. குறைந்தபட்சம் 235 கி.மீ., அதிகபட்சம் 19,500 கி.மீ. தொலைவில் உள்ள புவி நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஏறத்தாழ 125 நாள்கள் பயணத்துக்கு பின்னா் அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அதற்கேற்ப தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ‘ஆதித்யா’ விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஏற்கெனவே 3 முறை அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து நான்காவது முறையாக விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலை மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆதித்யா’ விண்கலம் புவிக்கு அருகே வரும்போது அதிலுள்ள உந்துவிசை இயக்கப்பட்டு சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை ஏற்கெனவே 3 முறை மாற்றப்பட்டுள்ளது. தொடா்ந்து வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை(செப்.15) நான்காவது முறையாக விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறைந்தபட்சம் 71,767 கி.மீ தொலைவும், அதிகபட்சம்1,21,973 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. இன்னும் 1 முறை சுற்றுப்பாதை மாற்றப்பட உள்ளது.

அதற்கு அடுத்து  ‘ஆதித்யா’வின் பயணப் பாதை செப்.15-ஆம் தேதி மாற்றி அமைக்கப்படும். அதன் பின்னா் புவி வட்டப் பாதையில் இருந்து விலகி விண்கலம் சூரியனை நோக்கி பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.