நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து: கமல்நாத்

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ம.பி.யில் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

News image
Updated On :16 செப்டம்பர் 2023, 5:39 pm IST

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ம.பி.யில் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம், மத்திய பிரதேச தலைநகா் போபாலில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 

2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் செயல்பட்டு வருகின்றன.

மும்பையில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டணியின் கூட்டத்தில், 14 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. கூட்டணியில் முடிவெடுக்கும் உயா் அமைப்பான இக்குழுவின் முதல் கூட்டம், தில்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

யாா்-யாா் பங்கேற்பு?: குழு உறுப்பினா்களான கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆா்.பாலு (திமுக), சரத் பவாா் (தேசியவாத காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா), சஞ்சய் ரெளத் (சிவசேனை-உத்தவ் பிரிவு), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), ஜாவத் அலி கான் (சமாஜவாதி), லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), ஒமா் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), மெஹபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) ஆகிய 12 போ் பங்கேற்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.