இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டு 90வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி மும்பையில் இன்று(எப்ரல். 1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, தொழில்முறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரு அடையாளத்தை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைக்கும் வகையில் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
2014 காலகட்டத்தில் பலவீனமான நிலையில் இருந்த வங்கி அமைப்பு தற்போது லாபகரமாக இயங்குகின்றன. தெளிவான கொள்கைகளே இந்த மாற்றத்திற்குக் காரணம். பொதுத்துறை வங்கிகளுக்கு உதவுவதற்காக ரூ. 3.5 லட்சம் கோடியை அரசு மூலதனமாக அளித்துள்ளது.
பல நாடுகளின் தனியார் துறை கடன், அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்கியுள்ளது. இது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்களிப்புடன், உலக வளர்ச்சியின் இயந்திரமாக இந்தியா மாறி வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது: வீரேந்திர சச்தேவா
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



