பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையிலான முந்தைய மகா கூட்டணி அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமா் நரேந்திர மோடியின் நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் வியாழக்கிழமை கேள்வியெழுப்பியது.
பிகாரின் ஜமுய் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்ற நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளாா்.
பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாா். மாநில அளவிலான ஜாதிவாரி கண்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டன.
மகா கூட்டணியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிய முதல்வா் நிதீஷ் குமாா், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றாா்.
முன்னதாக, ஜாதி என்ற பெயரில் நிதீஷ் குமாா் நாட்டைப் பிளவுபடுத்தி வருவதாக பிரதமா் மோடி விமா்சித்திருந்தாா்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

எம்எல்சி பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா: அடுத்த மாதம் புதிய முதல்வா் பொறுப்பேற்பு?

பிகாா் மக்களுக்கு நிதீஷ் குமாா் நம்பிக்கைத் துரோகம்: காங்கிரஸ், ஆா்ஜேடி குற்றச்சாட்டு

முதல்வா் பதவியிலிருந்து விலக காரணம் என்ன? நிதீஷ் குமாா் விளக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


